Archive for 2011

எங்கேயும் எப்போதும்


எங்கேயும் எப்போதும்


படத்தை பார்க்கும் பார்வையளனுக்கு படத்தின் ஏதாவது ஓரு காட்சியிலாவது இது நல்ல படம் என்று தோன்ற வேண்டும் . அந்த பணியை எங்கேயும் எப்போதும்-சிறப்பாக செய்துள்ளது .இப்படி ஒரு படம் எடுத்ததற்காக இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். .

படத்தின் கதை -படத்தின் கதை மிக சிறியது தான் செய்திதாள்களில் சாலை விபத்துகளை பார்க்கும் பொழுது அவை நமக்கு வெறும் செய்திகளாக மட்டுமே தெரிகிறது.ஆனால் அந்த விபத்தில் சிக்கியிருப்பவர்கள் ,அவர்களின் பின்னனியை நாம் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை .அப்படி ஒரு விபத்து நடந்து இருக்கும் இடத்திற்கு இயக்குனர் நம்மை அழைத்து செல்கிறார்.படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பலர் கூறியது ஒன்று தான். இன்மே வண்டியை கொஞ்சம் மெதுவாக ஓட்டனும் என்பதுதான் . “அது  தான் இயக்குனரின் வெற்றி.” ஜெய்- ஜெய்க்கு விஜய் போன்ற தோற்றம் சில காட்சிகளில் அவரை இமிடேட் செய்யவும் செய்கிறார். காதல் காட்சிளில் அசத்துகிறார். படத்தின் நாயகி என்றால் அது அஞ்சலி தான் இது போன்ற வேடங்கள் சாதாரணமானவை ஏற்கனவே கற்றது தமிழ் அங்காடி தெரு போன்ற படங்களில் இதை விட கனமான வேடங்களில் அவர் நடித்துள்ளார். ஜெய்யை அவர் அலையவிடும் காட்சிள் சில இடங்களில் அவரது முகபாவம் அவர் ஒரு தேர்ந்த நடிகை என்பதை வெளிப்படுத்துகிறது. அனன்யாவுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அவரின் பாத்திரம் அறிந்தது அழகாக நடித்திருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நல்ல புதுவரவு .படத்தில் என்னை கவர்ந்தது துனை நடிகர்களின் தேர்வுதான். கட்சிதமான தேர்வு ,குறிப்பாக அனன்யாவின் அக்காவாக வருபவர் .ஜெய்யின் கடை முதலாளி ,பேருந்ததில் பயணம் செய்தும் புது மன தம்பதிகள் ,குறிப்பாக அந்த குழந்தை ,என ஒவ்வொருவரும் நம்மை கவர்கின்றனர்.”திருச்சியும் சென்னையும் அழகாக இருக்கிறது

படத்தின் குறைகள் என்றால் .படம் சற்று மெதுவாக செல்கிறது என்பது தான் .அது மட்டுமல்லாமல் படத்தில் எதை முக்கிய படுத்துவது என்று இயக்குனர் குழம்பி விட்டார் என்பதே எனது கருத்து .காரணம் படத்தில் விபத்திற்கான காரணத்தை தெளிவாக சொல்லாதது .ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் கவனமின்னையால் இந்த விபத்து நடந்ததிருப்பதாக காட்டியிருந்தால் பார்வையாளனுக்கு அதன் தாக்கம் சரியாக சென்று இருக்கும் .அது மட்டுமல்லமால் அந்த விபத்து காட்சியை கடையாக மட்டும் காட்டியிருக்கலாம் அப்பொழுது படம் பார்த்துகொண்டு இருப்பவர்களுக்கும் விபத்தின் தாக்கம் சரியாக சென்று இருக்கும் .மாறாக விபத்து முதல் காட்சியிலே காட்டப்படுவதால் பார்வையாளனுக்கு யார் சாக போகிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறான்



 கல்லுரி படத்தில் கடைசிக்கு  முந்தின காட்சி வரை பார்வையாளன் நாயகனும் நாககியும் எவ்வாறு சேர போகிறார்கள் என்ற கோணத்திலேயே கதை சொல்லப்பட்டு இருக்கும் இறுதி விபத்து காட்சி பார்வையாளனுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் .அது போல இந்த படத்திலும் காட்சியை அமைத்து இருக்கலாம் என்பது எனது கருத்து .வெறும் பிரச்சார படமாக மட்டும் அமையாது கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற வைத்த இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.
















இரண்டு மணிநேரம் படம் பார்க்காத போது வராத ஒரு உணர்வு, அரை மணிநேரத்தில் எடுக்கப்படும்
குறும்படங்களில் தோன்றாத உணர்வு, இரண்டு நிமிட விளம்பர படத்தில் தோன்றியது என்றால் அதற்கு காரணம், நிச்சயம் "இசைப்புயல் மட்டும் தான்" .இரண்டு நிமிடத்தில், "ஒரு ஜிம்னாஸ்டிக் பெண்"
"பாலத்தை கடக்கும் ஆசாமி" "நடனமாட துவங்குவதற்கு முன் தனது தந்தைக்கு கால் செய்யும்
சிறுவன்"  "படிகளில் ஏறும் சர்தார்ஜி" "தனது மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட சொல்லி தரும்
கணவன்"  "ரானுவ வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சிறுவன்" "விமானம் ஓட்ட செல்லும் பெண்மனி" "பாராசூட் சாகசம் செய்யும் இளைஞன்" என ஒவ்வொன்றும் சிறு குறும்படங்களாக உருவெடுக்கின்றன . ஒரு சிறந்த விளம்பரம் நம் உணர்வை தூண்டும் வகையில் நீங்களும் பாருங்கள்.




உலக சினிமாவை பற்றி அனைவரும் எழுதி கொண்டு இருக்கும் பொழுது, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சினிமாக்கள் என ஒரு பகுதியை நான் எழுதப் போகிறறேன் .எழுத போகும் அனைத்து
 படங்களும் உலக சினிமாக்கள் கிடையாது தான் என்றாலும் . நான் எனக்கு தெரிந்ததை மட்டும் அல்லது நான் பார்த்த படங்களை பற்றி மட்டும் தான் எழுத போகிறேன் . முதன் முதலாக எழுத போவது "ரிதம்" படத்தை பற்றி.



புலி வேசம்

அடாசு திரைக்கதையையும் தனது திரைக்கதை யுக்தியினால் நல்ல திரைக்கதையாக மாற்றும் திறமை இயக்குனர் வாசுவிடம் உண்டு . ஆனால் விதி வலியது . தான் சிறுவயதில் இருந்து  காவல் காத்து வரும் பெண்னை காக்க நாயகன் போடும் வேசமே "புலி வேசம்"
நாயகன்  சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன். அவனுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் இளவரசு அடைக்கலம் கொடுத்து தன் மகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து வளர்க்கிறார் .பெரியவர்கள் ஆனதும் தன் பெண்னிள் திருமனத்திற்கு தடை ஆர் கே தான் என நினைத்து ஆர்கேவை ஊரை விட்டு போக சொல்கிறார் இளவரசு .ஆனால் ஆர்கேவுக்கு தெரியாமல் அவருடனே நாயகியும் வந்து ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள நாயகியை காப்பாற்ற ரௌடி
 அவதாரம் எடுக்கிறார் ஆர் கே முடிவு. என்ன என்பது கிளைமாக்ஸ்,.








ஆர் கே கிராமத்து கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறார். அவருக்கு அந்த கெட்டப்பும் நன்றாக பொருந்துகிறது .ஆனால் சிட்டியில் மாடர்ன் ரௌடியாக அவரது கெட்டப்பும், நடிப்பும், சுத்தமாக எடுபடவில்லை . ஆர்கே நாயகனாக நடிப்பதை தவிர்த்து விட்டு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்தால் இன்னும் நன்றாக நடிப்பார் என்பது எனது கருத்து . ஆர் கே நேரில் பார்க்க நன்றாக இருக்கிறார் ஆனால் படத்தில் தான் டெரராக இருக்கிறார் .

நாயகியாக திவ்யா அவரது கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தாலும் படத்தின் மையம் இவர் தான் என்பதாலும் சரியான தேர்வு .சதா படத்திற்கு தேவை இல்லை என்றாலும் இரண்டு பாடல்களுக்கு நடனமாடியுள்ளார் அதிலும் ஆர்கேவுடன் ஒரு டுயட் வேறு மிக தைரியசாலிதான் .

சதா எப்படி இந்த படத்திற்கு தேவை இல்லையோ அது போல் தான் கார்த்திக்கும் இந்த படத்திற்கு தேவை இல்லை .அதில்லாமல் ஆரம்ப காட்சிகள் சராசரி ரசிகனுக்கு புரியும் விதத்தில் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் .நாயன் சிறுவயது முதல் தென்காசியில் இருப்பது போல் காட்டியிருக்கிறார்கள் ஆனால் அவர் படம் முழுவதும் மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்.

மொத்தத்தில் ஆர்கேவின் துட்டில் வாசு வெளிநாடு சுற்றி பார்திருக்கிறார், பாடல்கள் வழியே .அது போல் ஆர்கேவின் ரௌடி கெட்டப்பில் இன்னும்
கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பாடல்களில் வாரேன் வாரேன் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருந்தது ..







ரௌத்திரம்-குருவி பராவயில்லை


இது மாதிரி படங்களை பார்க்கும் போது தான் நமக்கு உரைக்கிரது .விஜய் எவ்வளவு நல்லவர் என்று .அவராவது பராவயில்லை குருவி படத்தில் இடைவெளியில் இருந்து தான் அடிக்க ஆரம்பிப்பார் .ஆனால் படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி என்டு கார்டு போடும் வரை படத்தில் யார் யாரோ அடித்துகொண்டே இருக்கிறார்கள். .நம்மால் தான் தியேட்டரில் உட்கார முடியவில்லை.ஹேன்சம் ஹிரோக்கள் ஆக்சன் அவதாரம் எடுப்பது புதிது இல்லை என்றாலும் அது எல்லோர்க்கும் வொர்க் அவுட் ஆவதில்லை விதிவிலக்கு விஷால்.

நாயகன் அநியாயம் எங்க நடந்தாலும் பொங்கி எழுபவர்.அப்படி எழுவதால் நேரும் பிரச்சனைகள் தான் படம் ..படத்தின் ரசிக்க தக்க அம்சம் என்றால் படத்தின் சன்டைக்காட்சிகள் தான். படத்தில் என்னை கவர்ந்தவர்கள் என்றால் அது சிறிது நேரம் வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் சத்தியன் .பாடல்களில் மாலை நேரம் பாடல் கேட்பதற்கும் நன்றாக இருந்தது படமாக்கப்பட்ட விதமும் அருமை.கிளைமாக்ஸ் மரண மொக்கை கடைசி காட்சி டிவிஸ்ட் தான் என்றாலும் அது தேவையற்றது .