அடாசு திரைக்கதையையும் தனது திரைக்கதை யுக்தியினால் நல்ல திரைக்கதையாக மாற்றும் திறமை இயக்குனர் வாசுவிடம் உண்டு . ஆனால் விதி வலியது . தான் சிறுவயதில் இருந்து காவல் காத்து வரும் பெண்னை காக்க நாயகன் போடும் வேசமே "புலி வேசம்"
நாயகன் சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன். அவனுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் இளவரசு அடைக்கலம் கொடுத்து தன் மகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து வளர்க்கிறார் .பெரியவர்கள் ஆனதும் தன் பெண்னிள் திருமனத்திற்கு தடை ஆர் கே தான் என நினைத்து ஆர்கேவை ஊரை விட்டு போக சொல்கிறார் இளவரசு .ஆனால் ஆர்கேவுக்கு தெரியாமல் அவருடனே நாயகியும் வந்து ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள நாயகியை காப்பாற்ற ரௌடி
அவதாரம் எடுக்கிறார் ஆர் கே முடிவு. என்ன என்பது கிளைமாக்ஸ்,.
ஆர் கே கிராமத்து கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறார். அவருக்கு அந்த கெட்டப்பும் நன்றாக பொருந்துகிறது .ஆனால் சிட்டியில் மாடர்ன் ரௌடியாக அவரது கெட்டப்பும், நடிப்பும், சுத்தமாக எடுபடவில்லை . ஆர்கே நாயகனாக நடிப்பதை தவிர்த்து விட்டு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்தால் இன்னும் நன்றாக நடிப்பார் என்பது எனது கருத்து . ஆர் கே நேரில் பார்க்க நன்றாக இருக்கிறார் ஆனால் படத்தில் தான் டெரராக இருக்கிறார் .
நாயகியாக திவ்யா அவரது கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தாலும் படத்தின் மையம் இவர் தான் என்பதாலும் சரியான தேர்வு .சதா படத்திற்கு தேவை இல்லை என்றாலும் இரண்டு பாடல்களுக்கு நடனமாடியுள்ளார் அதிலும் ஆர்கேவுடன் ஒரு டுயட் வேறு மிக தைரியசாலிதான் .
சதா எப்படி இந்த படத்திற்கு தேவை இல்லையோ அது போல் தான் கார்த்திக்கும் இந்த படத்திற்கு தேவை இல்லை .அதில்லாமல் ஆரம்ப காட்சிகள் சராசரி ரசிகனுக்கு புரியும் விதத்தில் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் .நாயன் சிறுவயது முதல் தென்காசியில் இருப்பது போல் காட்டியிருக்கிறார்கள் ஆனால் அவர் படம் முழுவதும் மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்.
மொத்தத்தில் ஆர்கேவின் துட்டில் வாசு வெளிநாடு சுற்றி பார்திருக்கிறார், பாடல்கள் வழியே .அது போல் ஆர்கேவின் ரௌடி கெட்டப்பில் இன்னும்
கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பாடல்களில் வாரேன் வாரேன் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருந்தது ..