ரௌத்திரம்-குருவி பராவயில்லை


இது மாதிரி படங்களை பார்க்கும் போது தான் நமக்கு உரைக்கிரது .விஜய் எவ்வளவு நல்லவர் என்று .அவராவது பராவயில்லை குருவி படத்தில் இடைவெளியில் இருந்து தான் அடிக்க ஆரம்பிப்பார் .ஆனால் படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி என்டு கார்டு போடும் வரை படத்தில் யார் யாரோ அடித்துகொண்டே இருக்கிறார்கள். .நம்மால் தான் தியேட்டரில் உட்கார முடியவில்லை.ஹேன்சம் ஹிரோக்கள் ஆக்சன் அவதாரம் எடுப்பது புதிது இல்லை என்றாலும் அது எல்லோர்க்கும் வொர்க் அவுட் ஆவதில்லை விதிவிலக்கு விஷால்.

நாயகன் அநியாயம் எங்க நடந்தாலும் பொங்கி எழுபவர்.அப்படி எழுவதால் நேரும் பிரச்சனைகள் தான் படம் ..படத்தின் ரசிக்க தக்க அம்சம் என்றால் படத்தின் சன்டைக்காட்சிகள் தான். படத்தில் என்னை கவர்ந்தவர்கள் என்றால் அது சிறிது நேரம் வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் சத்தியன் .பாடல்களில் மாலை நேரம் பாடல் கேட்பதற்கும் நன்றாக இருந்தது படமாக்கப்பட்ட விதமும் அருமை.கிளைமாக்ஸ் மரண மொக்கை கடைசி காட்சி டிவிஸ்ட் தான் என்றாலும் அது தேவையற்றது .

0 Comments:

Post a Comment