நமது நாட்டிற்கு அணு உலைகள் தேவையா ??????????

இயற்கை இடர்பாடுகளால் உயிரிழப்புகள் நேரிடும்போது வருந்துவதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய முடிவது இல்லை .ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்கள்  குடும்பங்களுக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து இப்புவியில் சுனாமி பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்புகளால் மறைந்த அணைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம் . புவியையும் மனித உயிர்களையும் அழிப்பதற்கு திட்டங்கள் உருவாகும் போது நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது . அரசு மற்றும் செயல் திட்டம் தீட்டுபவர்களால் உருவாக்கப்பட்ட தீய நோக்குடைய  ரகசியத் திட்டம் தான் அணு உலை .அணுக்கசிவால் ஜப்பான் நாடு அணு கசிவின் அபாயத்தை தவிர்க்க தீவிரமாக போராடி வருகிறது .அங்குள்ள அணு உலைகள் வெடித்து சிதறினால் மக்கள் என்ன ஆவார்கள் என்று தெரியவில்லை .கட்டடவியலில் பெரும் சாதனை படைத்த அவர்களே இம்மாதிரியான கதிர்வீச்சினை தடுக்க பெரும்பாடு பட வேண்டியுள்ளது           அதனால் தான் கன்னியாகுமரியில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து நமக்கு அச்சம் ஏற்படுகிறது .தமிழக அரசு  நமது அனு உலைகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை உடனடியா தெரிவிக்க வேண்டும் .




இதே கருத்தை வலியுறுத்தி மதுரை மாநகரில் மக்கள் கண்காணிப்பகம் சார்பாக உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது .இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குனர் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார் .மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் இராசன் முன்னிலை வகித்தார் .மேலும் இந்நிகழ்சியில்  தமிழ்நாடு இறையில் கல்லூரி ,லேடி டோக் கல்லூரி மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் போன்ற அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர் .நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கண்கானிப்பக தலைவர் பிரபாகரன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.............




0 Comments:

Post a Comment