சமசீர் கல்வி வேண்டுமா ? வேண்டாமா ? என்ற கேள்வி தற்சமயம் பரபரப்பாக கேட்கப்படுக்கிறது .முந்தைய முதல்வர்
தன்னைப்பற்றி பாடத்திட்டங்களை கூட எடுத்து விட்டு புத்தகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டாலும்
தற்பொழுதைய முதல்வர் அதை பரிசீலீக்க கூட முன்வரவில்லை... வைகோவை கழட்டி விட தூத்துக்குடி நிறுவனத்திடமிருந்து எவ்வளவு வாங்கினார் என்பது வைகோவுக்கு கூட தெரியாது . ஆனால் எனது சந்தேகம் என்னவெனில் தனியால் பள்ளிகளிடம் இருந்து இவர் எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதே . பணக்காரனும் மெத்த படித்தவனும் என்றுமே தனக்கு கீழ் இருக்கும் சமூகம் தனக்கு சமமாக வருவதை விரும்புவதில்லை ... முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர் கல்வியை நீங்கள் எதிர்பீர்கள் என்றால் கருணாநிதியின் கதியே உங்களுக்கும் மதுரையின் பல்வேறு இடங்களில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக கடந்த புதன் கிழமை அன்று மக்கள் கண்காணிப்பகம் சார்பாக சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னால் பொது செயலாளர் மனிதத்தேனி ரா. சொக்கலிங்கம், மதசாற்பற்ற ஜனதாதளம் தலைவர் ஜான் மோசஸ் மனித குடிமக்கள் இயக்கம் தேவசகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ..


மேலும் மனித உரிமை சார்பாக தமிழக முதல்வர்க்கு இந்த கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது
தாங்கள் மீண்டும் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக
பொறுப்பேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தில் குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் நிறைவேற்றப்பட்டு 2010ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
தங்களுக்கு தெரிந்ததே. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை மாநில அரசுகள்
தத்தமது சூழலுக்கு ஏற்ப விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்
கொண்டது. ஆனால் இதுவரை தமிழகத்தில் விதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால்
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை
தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஜனநாயக சக்திகளின் நீண்டகால பேராட்டங்களின் விளைவாகவே தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி
பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுபாடதிட்டமே சமச்சீர்க் கல்வி ஆகாது என்பதை
தாங்கள்அறிவீர்கள் ஆனால் பொது பாடத் திட்டம், பொது பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில்
பொதுத் தேர்வு என்பன சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணமாக இருந்தது. பிற மாநிலங்களை
ஒப்பிடும் போது தமிழகத்தில் மட்டும்தான் நான்கு வகையான வாரியங்கள், பாடதிட்டங்கள் மற்றும்
தேர்வு முறைகள் உள்ளன. மீண்டும் நான்கு வகையான பாடதிட்டத்திற்குள் செல்வது என்பது
கல்வி வளர்ச்சியில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் சமச்சீர்க் கல்வி
பாடதிட்டத்தையே இக்கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த குடிமைச் சமூகங்களின் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு
உடனடியாக கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த போதிய நிதியை ஒதுக்கிடு
செய்ய வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்காக அறிவிப்பை தமிழக
அரசு வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பற்ற
பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு ௨௫ சதவீத இடஒதுக்கிட்டை முறையாக
நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட அதிக கட்டணம் பெறும் பள்ளிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க
வேண்டும்.
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில கல்வி ஆலோசனைக் குழுவை உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர் நியமனம், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஒரு
பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்க வேண்டும்.
பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும்பகுதி பங்கு
உள்ளதால் தமிழக அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதிய விழிப்புணர்வும்
வழிகாட்டுதலும் அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
ஜனநாயக அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக கொண்டு
வரப்பட்ட சமச்சீர்க் கல்வி பாட திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். பல வகையான பள்ளிகள், பலவகை வாரியங்கள் உள்ள நிலையை
மாற்றி ஒரே மாதிரியான பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையான சமச்சீர் கல்வி என்பது பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் வழியாக
மட்டுமே நிறைவேற இயலும். தமிழக அரசு இந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை
செய்து பள்ளிக் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ குடிமைச் சமூக
அமைப்புகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.