போட்டா போட்டி 50/50

போட்டா போட்டி 50/50

தேனி பக்கம் ஒரு கிராமம் அங்கே இரண்டு மைனர்கள்.அவர்களின் மாமா பன்னையாருக்கு ஒரே மகள்,அவளை யார் கட்டுவது என்று இருவருக்குள்
போட்டி,கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு தான் பெண் என்று சொல்கிறார். ஒரு டீமிற்கு மயில்சாமி கோச்சாகவும், மற்றொரு டீமிற்கு சடகோப்பன் ரமேஷ் கோச்சாகவும் வர, யார் ஜெயித்தார்கள் என சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்
படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் முதல் பாதி கதைக்குள்ளே போகமலேயே நம்மை சிரிக்க வைத்து இடைவெளி வரை கொண்டு வந்து விடுகிறார்கள் .கிளைமாக்ஸ் கிரிக்கெட் போட்டியை இன்னும் சற்று விறுவிறுப்பாக படமாக்கியிருந்தால் மற்றொரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும் .சடகோப்பன் ரமேஷ் நல்ல புதுவரவு ,ஒரிஜினல் குரலா என்று தெரியவிலிலை மற்றபடி நடிப்பதற்கு ஒன்றும் இல்லை .படத்தில் நடித்திருப்பவரகள் என்றால் இருவர் தான் அவர்கள் கொடை காரணாக வரும் “மைனர்” தான் பெயர் தெரியவில்லை மனிதர் பின்னி எடுத்துள்ளார் .அதுவும் கிளைமாக்ஸில் அவர் ரன் எடுக்காததற்கு சொல்லும் காரணம் காமெடி கதகளி ..அவரது அடிபொடியாக வரும் “அவதார்” அட்டகாசமான நடிப்பு அவர் பேசி குழப்பும் ஒவ்வொறு வார்த்தையும் மனிதர் பாடிலேங்வேஜ்ஜில் பின்னி எடுத்திருக்கிறார் .நாயகி பாந்தமாக இருக்கிறார் . முன்பகுதியில் வரும் காதல் பாடலும் அதனை படமாக்கியவிதமும் அருமை .இரண்டாம் பாதியில் வரும் வெளிநாட்டு பெண்கள் வரும் பாடலும் அதை எடிட் செய்த விதமும் செம மொத்தத்தில் ஜாலியாக ஒரு படம் பார்ப்பதற்கு நிச்யம் கேரண்டி.


0 Comments:

Post a Comment