நான் பார்த்த திரையரங்குள் -நெல்லை மாவட்டம்


திரையரங்ககுகளை பற்றி எழுதிய பதிவுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்து,என்னையும் பதிவுகளில் ஒரு அங்கதினராக ஆக்கியிருப்பது மகிழ்சி அளிக்கிறது .பின்னூட்டம் மற்றும் பார்வையிட்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.பதிவினை எழுத தூண்டியஅட்ராசக்கைக்கு சிறப்பு நன்றி  மதுரை வந்த பத்து வருடத்தில் படம் பார்த்த திரையரங்குகளை பற்றி குறிப்பிட்டு இருத்தேன். இது நான் வளர்ந்த திருநெல்வேலி ஊரில் உள்ள திரையரங்குகளை பற்றி பார்வை.
தமிழ்நாட்டிலேய இரண்டு ஊர்களில் மட்டும் தான் இன்றளவிலும் குடிதண்ணீர் நன்றாக இருக்கும் ஒன்று கோவை. ஆனால் அங்கு கூட பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும் ஆனால் இன்றும் தினமும் தண்ணீர் வரும் ஊர் ஒன்று உன்டென்றால் அது நெல்லை மாவட்டம் தான் .நான் நெல்லைக்கு சென்று கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது .அதனால் இது டாப்டென் திரையரங்குள் அல்ல நான் பார்த்து ரசித்த திரையரங்குகளை பற்றியது .

சென்ரல்

நெல்லையின் மிகப்பெரிய திரையரங்கம் சுமார் 1000 மேற்ப்பட்டோர் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கலாம் தியேட்டர் கலையரங்கம் போல் அமைந்திருக்கும் இந்த திரையரங்கில் என்றென்றும் காதல் படம் பார்த்துள்ளேன் டிக்கெட் 3.90 மற்றும் 7 இப்பொழுது தியேட்டரை மூடி விட்டார்கள் கடைசியாக இந்த திரையரங்கில் பார்த்த படம்காதலர் தினம் பெரும்பாலும் சத்தியராஜ், கார்த்திக் படங்களை அதிகம் வெளியிடுவார்கள் .


 
செந்தில்வேல்

நான் முதன் முதலாக எனது தம்பியுடன் தனியாக சென்று பார்த்த திரைப்படம்காட்சில்லா அந்த திரைப்படத்தை பாளையங்கோட்டை செந்தில்வேல் திரையரங்கத்தில் தான் பார்த்ததேன் .அந்த திரையரங்கில் படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம் டிக்கெட் விலை, அப்பொழுது எல்லாம் பெண்கள் டிக்கெட் 2.60 காசு ஆண்கள் டிக்கெட் 5.60 நான் முதல் முதலாக வீட்டுக்கு தெரியாமல் தனியாக சென்று பார்த்த படம்ஹலோ இந்த திரையரங்கத்தில் தான் கடைசியாக பார்த்த படம் கமல் நடித்தபம்மல் கே சம்மந்தம் இப்பொழுது தியேட்டர் இயங்கி வருகிறதா என்று தெரியவில்லை.

பூர்ணகலா

அப்பொழுது எல்லாம் காதலுக்கு மரியாதை, சூர்ய வம்சம், கன்னுபடபோகுதய்யா ,போன்ற தொடர் வெற்றி படங்களை மட்டுமே திரையிடுவார்கள். திரையரங்கு ஸ்கிரின்களை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் .நாயகன் நாயகி முக்கியமான சண்டைக்காட்சிகளின் போது விளக்குகளை எரிய விடுவார்கள் நச்சென்று இருக்கும். ஆனால் இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கும் .இந்த தியேட்டரின் ஒரு கொடுமை என்னவென்றால் படம் போடுவதற்கு முன்பே முதல் வகுப்பு டிக்கெட்டை கொடுத்து விடுவார்கள். படம் போட ஆரம்தித்த பின்புததான் இரண்டாம் வகுப்பு மற்றும் முன்றாம் வகுப்பிற்கான டிக்கெட்டுகளை கொடுப்பார்கள் எனவே இந்த திரையரங்கில் திரைப்படம் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்ப்பேன் கடைசியாக பார்த்த படம் ஸ்பைடன் மேன் 1

ரத்தினா டாக்கிஸ்

நெல்லையின் மையப்பகுதில் அமைந்ததுள்ளது .அப்பொழுது ரஜினி படங்கள் என்றால் அது ரத்னாவில் தான் திரையிடுவார்கள். தியேட்டர் படுமோசமாக இருக்கும், நான்அருணாச்சலம்முத்து போன்ற படங்களை இங்கு தான் பார்த்ததேன் ரஜினி ரசிகனாக மாறியது கூட இங்கிருந்து தான் என நினைக்கிறேன், டைசியாக பார்த்ததுஜெமினி

பார்வதி

நெல்லையில் கலைவடிவத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் முதல் திரையரங்கம் இதுவே .முன் பக்கத்தில் தாமரை இலை போல அமைத்து அதனுள் இருக்கைகளை அமைத்திருப்பார்கள் .எனக்கு தெரிந்தநாட்டாமை அதிக நாட்கள் ஓடியது அது மட்டுமல்லாது அம்மன் வகையரா படங்ககை இந்த திரையரங்கில் தான் திரையிடுவார்கள் கடைசியாக பார்த்த திரைப்படம் நினைவில் இல்லை இந்த திரையரங்கமும் தற்பொழுது இல்லை திருமண மண்டபமாக மாற்றிவிட்டார்கள். 



பேரின்பவிலாஸ்

பூர்ணகலா திரையரங்கதின் பின் உள்ளது மிகசிறிய தியேட்டர் ஆனால் ஒலி அமைப்பு அட்டகாசமாக இருக்கும் டைட்ானிக் படம் 50 நாட்களுக்கு மேல் ஓடியது .பெரும்பாலும் ஆங்கில டப்பிங் படங்களை வெளியிடுவார்கள் தலைவரின்படையப்பா படத்தை இங்கு தான் பார்த்தேன் கடைசியாக பார்த்ததுகஜினி.

அருணகிரி

சிறந்த தியேட்டர் மெயின்டன்ஸ் உள்ள ஒரே திரையரங்கம் இது தான் தியேட்டரின் உள் கட்டமைப்பு அருமையாக இருக்கும் இங்கும் ஆங்கில் டப்பிங் படங்களைதான் அதிகளவில் திரையிடுவார்கள் நான் ஜேம்ஸ் பாண்டின் தி வேல்ட் ஸ் நாட் எனாப் படத்தை இங்கு தான் பார்த்தேன்.

ராயல் திரையரங்கு

நெல்லையின் மிகப்பழமையான திரையரங்கு பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களைதான் அதிகமாக திரையிடுவார்கள் நெல்லையின் நடுப்பகுதில் அமைந்துள்ளதால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இங்குகாதலா காதலா படத்தை பார்த்துள்ளேன் கடைசியாக பார்த்ததுமன்மதன்


ராம் முத்துராம்

இந்த தியேட்டருக்கு நெல்லையின் முதல்டிடிஸ் திரையரங்கம் முதல் இரண்டு ஸ்கீரின் திரையரங்கம் அதுவும் இரண்டுமே 70mm திரையரங்கம் பல சிறப்புகள் உண்டு . முதல் முதலாக டிஆரின்மோனிசா என் மோனாலிசா திரைப்படத்தையும் விஜயகாந்த் நடித்தஎங்கள் அண்ணா திரைப்படத்தையும் திரையிட்டார்கள் இந்த திரையரங்கத்தில் தான்முதல்வன் திரைப்படத்தை பார்த்தன் ஒளி அமைப்பு நன்றாக இருக்கும் .இந்த திரையரங்கம் வந்த பின்புதான் மற்ற அணைத்து திரையரங்குளிலும வரிசையா டிடிஸ் ஒலி அமைப்பு செய்யப்பட்டது கடைசியாக பார்த்தது கமல் நடித்தபஞ்சதந்ததிரம் .




பாம்பே தியேட்டர்

நெல்லையின் சிறந்த ஒளி மற்றும் ஒலி அமைப்புள்ள திரையரங்கம் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால் ஏரியா பெரிய மனிதர்கள் பெரும்பாலும் இந்த திரையரங்குக்குதான் வருவார்கள் .இந்த திரையரங்கத்தில் நான் ஒரே ஒரு படத்தைதான் பார்த்திருக்கிறேன் அது அர்ஜூன் நடித்தஏழுமலை.




இது போக லெட்சுமி திரையரங்கு கணேஷ் திரையரங்கு போன்றவற்றில் படங்களை பார்த்துள்ளளேன் ஆனால் அவை எல்லாம் இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை


எனக்கு சிறு வயதில் இருந்தே திரையரங்கத்தின் மேல் தனிக்காதல் உண்டு .அந்த காதல் தான் இதனை எழுத காரணம் அடுத்த பதிவு கோவை திரையரங்குளை பற்றியது.
 





0 Comments:

Post a Comment