LIVI BABA
லேபிள்கள்: விமர்சனம்
ஊழலும் மனித உரிமை மீறலே -
மதுரை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்,
புதுடெல்லியில் அமைந்துள்ள தலித் பவுண்டேசன் - மக்கள்
கண்காணிப்பகத்துடன் இணைந்து தலித் மக்களுக்கு ஏற்படும் மனித உரிமை
மீறல்களைக் கண்காணித்து, சட்ட உதவிகள் வழங்குவது குறித்து பத்து நாள் பயிற்சி,மதுரை பில்லா மையத்தில் இன்று தொடங்கியது.இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களை, தலித் பவுண்டேசன் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் வரவேற்றார். பயிற்சியின் நோக்கம்
குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், பயிற்சி
முகாமினை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து சிறப்புரை நிகடிநத்தினார்.மேலும் அவர் கூறியதாவது ஊழல் என்பது மிகப்பெரிய மனித உரிமையாகும்.காவல்துறையில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.அரசு காவலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்துள்ளது. எனவே லஞ்சம் வாங்குவது என்பது தேவையற்றது. பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வெகுதூரத்திலிருந்து தனது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு காவல்நிலையம் வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட சூடிநநிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பிரச்சனைகளுக்கு காவல்துறை தீர்வு காணுவதற்கு பதிலாக அவர்களிடமே லஞ்சம் பெறுவது மிகக் கடுமையான குற்றமாகும். காவல்துறை என்பது இந்திய நாட்டின்
சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுவதையே பிரதானமான நோக்கமாக கொண்டதாகும். லஞ்சத்தை ஒழிப்பதற்கு மக்களும் உறுதுணைகாக இருக்கவேண்டும். மக்கள் அனைவரும் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு லஞ்சம் கொடுத்து தீர்வு காணமாட்டோம் என்றும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற நிலையை மக்கள் எடுத்தால் லஞ்சம் முற்றிலும் ஓழிந்துவிடும் என வலியுறுத்தினார்.
வாடிநவுரிமை, சமத்துவ உரிமை, மாண்புரிமை, சுதந்திர உரிமை மற்றும்
சட்டங்கள் குறித்த பயிற்சி, பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து
அவர்களுக்கான உரிமைகளைத் தெரிவித்து அவர்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதற்கான பயிற்சியினை வழக்கறிஞர். ஹென்றி திபேன் வழங்குகிறார். கல்வி உரிமைகள் குறித்து மரியசூசை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து ஜி.கணேசன், பெண்களுக்கான உரிமைகள் குறித்து சிந்திய திபேன் ஆகியோர் வழங்குகிறார்கள் .
லேபிள்கள்: சமூகம்
லேபிள்கள்: சமூகம்
லேபிள்கள்: விமர்சனம்
லேபிள்கள்: சமூகம்
பிளாக் ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் எழுதவே ஆரம்பித்தேன், மெது மெதுவாக ஒவ்வொன்றாக கற்று இந்த வருடம் தான் பதிவு எழுத தோன்றியது . பிரபல பதிவர்களின் "கொத்து புரோட்டா" "சான்விச் நான் வீச்" "இட்லி வடை" போன்றவற்றை எழுதும் போது எல்லாம், நானும் ஏன் எதுத கூடாது? என்று என்னியது உண்டு (ஆமா இவரு பெரிய வெட்டி வௌக்கெண்ணெய் அப்படியே எழுது தள்ளிட்டாலும்!!! )அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது இருந்தாலும் நான் எழுதுற முடிவில் தீவிரமா இருக்கேன் . முடிவுபன்ளிட்டேன் ஆனா என்ன பேர்ல எழுதுறதுன்னு ஒரு வாரமா ஒரே குழப்பம், அப்படி
இப்படின்னு யோசிச்சு "மதுரை பேமஸ் ஜிகர்தன்டா" ன்னு பேர்ல எழுதுறதுன்னு முடிவு பன்னி இருக்கேன் .வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக எழுத முயல்கிறேன்.
மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 14.07.2011
இந்த வாரம் நிகழ்ச்சி
கோடைகாலம் முடிந்து பள்ளிகள் ஆரம்பித்து விட்டாலே நலசங்கங்கள் அனைத்தும் "நீ நான்" என்று போட்டி போட்டுக்கொண்டு நோட்டு புத்தகங்கள் வழங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பெரும்பாலான சங்கங்கள் ."மதம்" மற்றும் "சாதி" சார்ந்தே செயல்படுகிறது.ஆனால் சுமார் ௨௦ தேர்ந்தெடுத்த வசதி வாய்ப்பு இல்லாத மாநகராட்சி பள்ளிகள், அதிலும் சுமார் "௨௦௦௦" ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் போன்றவற்றை கொடுத்து வருகிறது ௨௩! ஆண்டுகளாக அந்த அமைப்பின் பெயர் "கண்ணதாசன் நற்பனி மன்றம்" அமைப்பின் தலைவர் "மனிதத்தேனி
ரா.சொக்கலிங்கம்" மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துவோம். இவரை பற்றி விரிவான பதிவு விரைவில் .
ரசித்த பாடல்
சமீபத்தில் கேட்டு ரசித்த பாடல் "வாகைசூடவா" . படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் என்றால் "செங்க சூலக்காரா" "தஞ்சாவூர் மாடத்தி"மற்றும் "ஆனா ஆவன்னா" போன்ற பாடல்களை முதல் முதலாக கேட்ட பொழுதே பிடித்து விட்டது. விமலுக்கு மற்றொரு வெற்றிபடமாக அமையக்கூடும் .அதே போல் தெய்வதிருமகள் படத்தில் வரும் விழிகளில் ஒரு வானவில் பாடலும் அட்டசாசமாக இருக்கிறது.
கேட்டு ரசியுங்கள்
ரசித்த காணொலி
இந்த பாடலை அனைவரும் பன்பலையில் கேட்டு ரசித்திருக்கலாம் இன்று வரை இது என்ன திரைப்படம் எனக்கு தெரியவில்லை .ஆனால் பாடலை பாடிய பவதாரனியின் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
லேபிள்கள்: மதுரை பேமஸ் ஜிகர்தன்டா
லேபிள்கள்: விளம்பரம்
லேபிள்கள்: சமூகம்
பொதுவாக மலையாளப் படங்களை எனக்கு பிடிக்காது காரணம், ஒரே மாதிரியான திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களாகவே அது அமைந்து இருக்கும்.ஆனால் பதிவுகளில் சில படங்களை பற்றி அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும். அப்படி டவுன்லோட் செய்து பார்த்த படங்கள், ""உருமி"" ""4பிரண்ட்ஸ்""
"நீலதாமரை"" "பிரான்சியேட்டன் அன்டு தி சைன்ட்" "கதா பறையும் போல" "கதா பறையுன்னு" ஆனால் இது போன்ற படங்கள் அனைத்துமே இயல்பு வாழ்கையை பிரதிபலிப்பது போலவே அமைந்தது இருக்கும், அப்படி இல்லாமல் மலையாளத்தில் ஒரு நல்ல அதிரடி திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை, அந்த ஆசையை முழுவதுமாக பூர்த்தி செய்த படம் அன்வர்.
பிருத்விராஜ் ஒரு முஸ்லீம் அவனது அப்பா அம்மா தங்கை என்று அழகான வாழ்கையை வாழ்ந்து வருபவர். அவரது தங்கையின் தோழியான மம்தா மோகன்தாஸை காதல் செய்கிறார்.தன் தங்கையின் திருமணத்திற்காக துணி எடுக்கும் போது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது .அதில் தந்தை,தாய்,தங்கை, என மூவரையும் இழக்கிறார்.இதில் ஆத்திரமடையும் அவர் அதற்கு காரணமான தீவிரவாதிகளை பலிவாங்க துடிக்கிறார் . காவல்துறை ஆணையர் பிராகஷ்ராஜின் துனையுடன், தீவரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை எவ்வாறு பலி தீர்த்தார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் ..
படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தமிழுக்கு அறிமுகமானவர்களே, அதனால் படமும் நமக்கு மிகவும் பிடித்தகாகி விடுகிறது .படத்தில் முக்கியமான நடிகர்களில் ‘லால் பிராகஷ்ராஜ்‘ ‘நித்யா’ ‘மேனன் மம்தா மோகன் தாஸ்’ போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .
லால்
முஸ்லீம் தீவிரவாதியாக சிறந்த நடிப்பு, பிரகாஷ்ராஜ் அவரை கைது செய்த பின் கேட்பார் "நான் ஏன் உங்களை கைது செய்து இருக்கேன்னு தெரியுமா" அதற்கு லால் "நல்லா தெரியும் நான் ஒரு முஸ்லீம் அதனால் தான்" என்பார் அட்டகாசமான வசனம்
பிருத்விராஜ்
பிருத்விராஜை தமிழ் படங்களில் சற்று காமெடியான கதாபாத்திரத்தில் பார்த்து விட்டு இது போன்ற சீரியாசான கேரக்டரில் மனிதர் சும்மா அசர வைக்கிறார் .தன் குடும்பத்தை இழந்த சோகத்தில் படம் முழுவதும் கோபம் கொண்ட இளைஞனாக சிறந்த நடிப்பை அளித்துள்ளார் .கடைசி காட்சியில் பிருத்விராஜ் ராஜ் பேசும் வசனம் ""கோவை குண்டு வெடிப்பால் உங்கள் இயக்கத்து வேண்ணா வெற்றி கிடைச்சுருக்கலாம் ஆனால் நான் இழந்தது உண்மையான முஸ்லீம்னா யாருன்னு சொல்லி கொடுத்த என் அப்பாவை என் குடும்பத்தை""
பிரகாஷ்ராஜ்
இது போன்ற வேடங்கள் பிராஷ்ராஜ்க்கு அல்வா சாப்பிடுவது போல் ஆனால் பிராஷ்ராஜை ஏன் கொல்ல வேண்டும்? அது தான் சற்று நெருடலாக இருந்தது .
மம்தா மற்றும் வித்யா மேனன்
படத்தில் நாயகிக்கான பங்களிப்பு மிகக்குறைவு இது போன்ற படங்களில் நாயகியே தேவையில்லை என்பது தான் எனது கருத்து படத்தில் இரண்டு பாடல்களுக்கு உதவியிருக்கிறார்.
வித்யா மேனனை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை பாப்பாவின் போட்டோவை மட்டுமே நான் ஒரு மணி நேரம் பார்ப்பேன்.படம் பார்த்தற்கு அவரும் ஒரு காரணம் என்றால் மிகையாகது .
திரைக்கதை
படத்தின் அடிநாதமே திரைக்ககைததான், ஏனெனில் "மதம்" பற்றிய படம் எடுக்கும் பொழுது காட்சி அமைப்புகளில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இயக்குனர் படாத பாடு பட வேண்டும்.படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வசனங்கள் அதிகமாக காணப்படுகிறது .படத்தின் முதல் பாதி முழுவதும் சிறைச்சாலையில் நடப்பது போல் காட்டப்பட்டாலும் .தொய்வில்லாத திரைக்கதையினால் படம் நம்மை அதனுடே அழைத்து செல்கிறது , பாடல்கள் பிற்பாதி நீளத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டு இருக்கிறது அதிலும் அந்த திருமணப்பாடல் .வித்யா மேனன் என்னுடைய செல்போனில் தினமும் இரவு அந்த பாடல் தான் ஒலிக்கிறது ナ.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்
லேபிள்கள்: livingston