ஊழலும் மனித உரிமை மீறலே !!!

ஊழலும் மனித உரிமை மீறலே -
மதுரை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்,

புதுடெல்லியில் அமைந்துள்ள தலித் பவுண்டேசன் - மக்கள்
கண்காணிப்பகத்துடன் இணைந்து தலித் மக்களுக்கு ஏற்படும் மனித உரிமை
மீறல்களைக் கண்காணித்து, சட்ட உதவிகள் வழங்குவது குறித்து பத்து நாள் பயிற்சி,மதுரை பில்லா மையத்தில் இன்று தொடங்கியது.இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களை, தலித் பவுண்டேசன் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் வரவேற்றார். பயிற்சியின் நோக்கம்
குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்,  பயிற்சி
முகாமினை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து சிறப்புரை நிகடிநத்தினார்.மேலும் அவர் கூறியதாவது ஊழல் என்பது மிகப்பெரிய மனித உரிமையாகும்.காவல்துறையில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.அரசு காவலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்துள்ளது. எனவே லஞ்சம் வாங்குவது என்பது தேவையற்றது. பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வெகுதூரத்திலிருந்து தனது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு காவல்நிலையம் வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட சூடிநநிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பிரச்சனைகளுக்கு காவல்துறை தீர்வு காணுவதற்கு பதிலாக அவர்களிடமே லஞ்சம் பெறுவது மிகக் கடுமையான குற்றமாகும். காவல்துறை என்பது இந்திய நாட்டின்
சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுவதையே பிரதானமான நோக்கமாக கொண்டதாகும். லஞ்சத்தை ஒழிப்பதற்கு மக்களும் உறுதுணைகாக இருக்கவேண்டும். மக்கள் அனைவரும் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு லஞ்சம் கொடுத்து தீர்வு காணமாட்டோம் என்றும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற நிலையை மக்கள் எடுத்தால் லஞ்சம் முற்றிலும் ஓழிந்துவிடும் என வலியுறுத்தினார்.

வாடிநவுரிமை, சமத்துவ உரிமை, மாண்புரிமை, சுதந்திர உரிமை மற்றும்
 சட்டங்கள் குறித்த பயிற்சி, பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து
அவர்களுக்கான உரிமைகளைத் தெரிவித்து அவர்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதற்கான பயிற்சியினை வழக்கறிஞர். ஹென்றி திபேன் வழங்குகிறார். கல்வி உரிமைகள் குறித்து மரியசூசை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து ஜி.கணேசன், பெண்களுக்கான உரிமைகள் குறித்து சிந்திய திபேன் ஆகியோர் வழங்குகிறார்கள் .


0 Comments:

Post a Comment