மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 14.07.2011

பிளாக் ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் எழுதவே ஆரம்பித்தேன், மெது மெதுவாக ஒவ்வொன்றாக கற்று இந்த வருடம் தான் பதிவு எழுத தோன்றியது . பிரபல பதிவர்களின்  "கொத்து புரோட்டா" "சான்விச் நான் வீச்" "இட்லி வடை" போன்றவற்றை எழுதும் போது எல்லாம், நானும் ஏன் எதுத கூடாது? என்று என்னியது உண்டு (ஆமா இவரு பெரிய வெட்டி வௌக்கெண்ணெய் அப்படியே எழுது தள்ளிட்டாலும்!!! )அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது இருந்தாலும் நான் எழுதுற முடிவில் தீவிரமா இருக்கேன் . முடிவுபன்ளிட்டேன் ஆனா என்ன பேர்ல எழுதுறதுன்னு ஒரு வாரமா ஒரே குழப்பம், அப்படி
இப்படின்னு யோசிச்சு "மதுரை பேமஸ் ஜிகர்தன்டா" ன்னு பேர்ல எழுதுறதுன்னு முடிவு பன்னி இருக்கேன் .வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக எழுத முயல்கிறேன்.



மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 14.07.2011


இந்த வாரம் நிகழ்ச்சி

கோடைகாலம் முடிந்து பள்ளிகள் ஆரம்பித்து விட்டாலே நலசங்கங்கள் அனைத்தும் "நீ நான்" என்று போட்டி போட்டுக்கொண்டு நோட்டு புத்தகங்கள் வழங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பெரும்பாலான சங்கங்கள் ."மதம்" மற்றும் "சாதி" சார்ந்தே செயல்படுகிறது.ஆனால் சுமார் ௨௦ தேர்ந்தெடுத்த வசதி வாய்ப்பு இல்லாத மாநகராட்சி பள்ளிகள், அதிலும் சுமார் "௨௦௦௦" ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் போன்றவற்றை கொடுத்து வருகிறது  ௨௩! ஆண்டுகளாக அந்த அமைப்பின் பெயர் "கண்ணதாசன் நற்பனி மன்றம்" அமைப்பின் தலைவர் "மனிதத்தேனி
ரா.சொக்கலிங்கம்" மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துவோம். இவரை பற்றி விரிவான பதிவு விரைவில் .


 ரசித்த பாடல்

சமீபத்தில் கேட்டு ரசித்த பாடல் "வாகைசூடவா" . படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் என்றால் "செங்க சூலக்காரா" "தஞ்சாவூர் மாடத்தி"மற்றும்  "ஆனா ஆவன்னா" போன்ற பாடல்களை முதல் முதலாக கேட்ட பொழுதே பிடித்து விட்டது. விமலுக்கு மற்றொரு வெற்றிபடமாக அமையக்கூடும் .அதே போல் தெய்வதிருமகள் படத்தில் வரும் விழிகளில் ஒரு வானவில் பாடலும் அட்டசாசமாக இருக்கிறது.
கேட்டு ரசியுங்கள்

ரசித்த காணொலி



இந்த பாடலை அனைவரும் பன்பலையில் கேட்டு ரசித்திருக்கலாம் இன்று வரை இது என்ன திரைப்படம் எனக்கு தெரியவில்லை .ஆனால் பாடலை பாடிய பவதாரனியின் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.





இந்த வாரம் கேள்வி

சமச்சீர் கல்வி வருமா வராதா?

இந்த வாரம் காமெடி

"திமுகவிற்காக இரண்டு பதிவிகள் காத்திருக்கின்றன"-பிரதமர் மன்மோகன் சிங்
"கலைஞர்-ரைட்டு அடுத்த ஆப்புக்கு ரெடி பன்னிட்டாரு"





1 Comment:

  1. லிவிங்ஸ்டன் said...
    nice

Post a Comment