சிறுவன் தில்சன் கொலை வழக்கில் முதியவர் ராம்ராஜ்பாண்டியன் கைது
செய்தியை கேள்விபட்டபோது .எனக்கு தோன்றிது இது தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" அவரது வாக்குமூலத்தில் அந்த சிறுவன் இதற்கு முன்பு பலமுறை இந்த மாதிரி செய்துள்ளதாகவும், தான் பல முறை கண்டித்துள்ளதாகவும் சம்பவத்தன் கோபத்தில் சுட்டதாகவும் கூறியுள்ளார் .நண்பரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் "உங்கள் வீட்டில் உள்ள மரத்தில் ஒரு சிறுவன் இது போல செய்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ?" என்ன ரொம்ப கோவம் வந்துச்சுன்னா அவனை புடிச்ச ரெண்டு அடி அடிச்சு இனி மேல் அப்படி பன்னக்கூடாதுன்னு சொல்வேன்னு சொன்னார் .இது தான் மனித இயல்பு,கோபத்தின் தன்னை மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நீங்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள், உங்களது அருகில் ஒருவன் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்டு கொண்டு வருகிறான், நீங்கள் சாந்தமானவராக இருந்தால் பொறுத்து கொள்வீர்கள். சற்று கோபக்காரராக இருந்தால் அவனிடம் சத்தம் போட்டு சொல்வீர்கள்.ராம்ராஜ் பாண்டியனும் அந்த ஒரு நிலையில் தான் இருந்திருப்பார் என்பது எனது கருத்து .அவரின் மேல் இவ்விதமான குற்றசாட்டுகள் வைக்கப்படுவது .அவர் ஒரு ராணுவ வீரர் என்பதால் தான் .அவரது தவறை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல, மாறாக தவறு அவர் மீது மட்டும் தான் என கூறுவதை தான் தவறென்கிறேன் .நேற்று பையனின் தாயார் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார், அதில் "எனது வலி தவறு செய்தவருக்கும் புரிய வேண்டும், எனவே அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.சரியான வார்த்தை  .ஆனால் இழப்பிற்கு இழப்பு என்பது எப்படி பாடமாகும் ..

0 Comments:

Post a Comment