தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


அயல் நாட்டு படங்களின் மூலத்தில் இருந்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. காரணம் அதை நமது பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மாற்ற தெரியாமல் மாற்றியிருப்பார்கள்.அப்படி இல்லாமல்,மூலக்கதையை மட்டும் எடுத்து கொண்டு நமது சமூக அமைப்புகளுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து, அதில் படத்தின் வெற்றிக்கான பார்முலாக்களையும் சேர்த்து படம் எடுப்பது சில இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது.அதில் விஜய் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன் .
படத்தின் கதை பற்றி எல்லோரும் அறிந்ததே என்றாலும்,படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் திரைக்கதையும்,விக்ரமின் அற்புதமான நடிப்பும்மட்டுமே .
படத்தில் பாரட்டுகுறியவர்கள்

விக்ரம்

விக்கரமின் நடிப்பை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர் ஒரு மகா நடிகர் என்பதற்கு அவரின் முந்தைய படங்களே சாட்சி படத்தின் பல காட்சிகளில் என் மனம் கணத்து விட்டது .தன் குழந்தை பிறந்தவுடன் காணச்செல்கையில், குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கும் போது மனைவி இறந்த செய்தி அவரிடம் சொல்ல படுகிறது .அப்பொழுது வெளிப்படும் முகபாவமும் பின்னனி இசையும் . அதே போல் "ஆரிரோ" பாடலிலும்  மனிதன் பின்னி எடுத்துள்ளார் .முக்கியமாக அந்த உட்சகட்ட கிளைமாக்ஸ் காட்சியில், குழந்தையும், விக்ரமும் சைகையால் பேசிக்கொள்ளும் காட்சி தியேட்டரில் அனைவரும் கைதட்டி ரசித்த காட்சி..அனைவரின் கண்களிலும் குறைந்த பட்சம் ஒரு துளி கண்ணீராவது வரும் .விக்ரமின் ஒவ்வொரு படங்களுமே அவருக்கு ஒரு மைல்கல்தான் என்றாலும்,அவரது கேரியரில் இது ஒரு உட்சம் என்று தாராளமாக சொல்லலாம் .

குழந்தை சாரா

முதல் முறையாக பார்க்கும் போதே குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றுகிறது . அமலா பாலுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் காட்சிகள் அருமை பல காட்சிளில் குழந்தையின் முக பாவங்கள் அட்டகாசபடுத்துகிறது

அனுஷ்கா

அருந்ததிக்கு பிறகு அனுஷ்கா நடித்தது இந்த படத்தில் தான் .வானம் படத்தில் ஓவர் மேக்கப் போட்டு முகத்தை நாராசப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் குளோசப் காட்சிகளில் கூட அவரின் முகம் களையாகவும், அம்சமாகவும் உள்ளது. இந்த படத்தல் இருந்து அவரின் தீவிர ரசிகனாகி விடுவேனா என்று அஞ்சுகிறேன் .

அமலா பால்

சொல்லிக்கொள்வது போல் காட்சிகள் மற்றும் வசனம் இல்லாவிட்டாலும் காந்த கண்ணழகி ஏதோ செய்கிறார்.

ஒளிப்பதிவு-நிரவ்ஷா

ஒளிப்பதிவு குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்று. அனைத்து ஷாட்களும் உலகத்தரம் வாய்ந்தவை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,"விழிகளிலே" பாடலில் அனுஷ்காவின் அழகை காட்டியதும் அந்த பாடலை எடுத்த விதமும் .

படத்தொகுபு -ஆண்டனி

படத்தின் திரைக்கதையை எந்த இடத்தல் இருந்து கூறினாலும் பார்வையாளனை குழப்பாமல் இருப்பதே சிறந்த படத்தொகுப்பு, அவ்வகையில் செவ்வனே செயல் பட்டு இருக்கிறார் ஆண்டனி.
இசை ஜிவி பிரகாஷ்

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் என்பதால்  பின்னனி இசை அற்புதமாக இருந்தது.

மொத்தத்தில் அருமையான ஒரு மென் சோக கதயை படித்தது போன்ற உணர்வு நன்றி இயக்குனர் விஜய்
தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


 

0 Comments:

Post a Comment